முதலமைச்சரை சந்தித்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி.. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையா.?

முதலமைச்சரை சந்தித்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி.. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையா.?

Update: 2021-01-08 19:37 GMT

வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி முதலமைச்சரை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக சார்பில் தமிழகம் முழுவதும், மாநகராட்சி மற்றும் நகராட்சி, கிராம நிர்வாக அலுவலக முன்பாக போராட்டம் நடத்தி கோரிக்கை மனுவையுள் அளித்தனர்.

இந்நிலையில், வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அவருடன் பாமக நிர்வாகிகளும் உடன் சென்றுள்ளனர். வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் எத்தனை சீட்டுகள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Similar News