ரிப்பன் மாளிகைக்கு 'சிங்கம்' சிங்கிளாத்தான் வரும்: செய்தியாளர்களை அலறவிட்ட பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்தன்!

சென்னை மாநகராட்சியில் 134வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 144க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீங்கள் மட்டுமே பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.

Update: 2022-02-22 12:26 GMT

சென்னை மாநகராட்சியில் 134வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 144க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீங்கள் மட்டுமே பாஜக சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.


இதனால் எப்படி திமுகவினரை எதிர்கொள்வீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உமா ஆனந்த், முதன் முதலில் முன்னாள் பிரதமராக இருந்த வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் மட்டுமே எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றனர். எனவே அவர்களை போன்று நானும் ரிப்பன் மாளிகையில் பாஜக சார்பாக கணக்கை தொடங்கியுள்ளேன். மேலும், சிங்கம் எப்பவுமே சிங்கிளாத்தான் வரும் என்ற பதிலையும் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். அவரது பதிலை செய்தியாளர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News