விரைவில் தமிழகத்தில் ஆட்சி - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரை!

Update: 2022-07-03 13:06 GMT

கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. விரைவில் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக பேசியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். இதில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்து வருகின்ற 40 ஆண்டுகள் பா.ஜ.க.வின் சகாப்தமாக இருக்கும். இந்தியா உலக தலைவராக மாறும் என்றார்.

மேலும், கடந்த தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வின் வெற்றி என்பது கட்சியின் வளர்ச்சி மற்றும் செயல்திறனுக்கான அரசியலுக்கு மக்கள் அளித்த தீர்ப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும் குடும்ப ஆட்சி, சாதிவெறி மற்றும் சமாதான அரசியலுக்கு அடியோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதலில் தெலங்கானா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி விரைவில் அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News