#BREAKING முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் பின்னால் சென்ற வாகனம் விபத்து.. திருநெல்வேலியில் பரபரப்பு.!

#BREAKING முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் பின்னால் சென்ற வாகனம் விபத்து.. திருநெல்வேலியில் பரபரப்பு.!

Update: 2021-01-04 17:49 GMT

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்காக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னால் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி.கே.பி. பிரபாகரன் காயமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

பி.எச்.பாண்டியனுக்கு அவரது சொந்த ஊரான சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் அவரது நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவரது திருவுருவச்சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மணிமண்டபம் மற்றும் சிலையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் பி.எச்.பாண்டியனின் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருநெல்வேலி வருகை புரிந்தார்.

இதற்காக சென்னையிலிருந்து இன்று பிற்பகல் 2 மணிக்கு தூத்துக்குடி வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் சேரன்மகாதேவி புறப்பட்டு சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது. திருநெல்வேலி அருகே இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னால் சென்ற வாகனம் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News