ஸ்டாலினை மிரட்டும் கிறிஸ்தவ மத போதகர்: பதிலளிக்குமா தி.மு.க?
ஸ்டாலினை மிரட்டும் கிறிஸ்தவ மத போதகர்: பதிலளிக்குமா தி.மு.க?
அகில இந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் என்ற கட்சியின் தலைவர் பிஷப் காட்ப்ரே நோபுள், தங்களைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளா விட்டால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கனவு முதல்வராக மட்டுமே நீடிக்க முடியும் என்று பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். கிறிஸ்தவர்களின் உண்மையான மக்கள் தொகை எண்ணிக்கை குறித்து அவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
Hindus be very very Secular.... pic.twitter.com/KcXiwamBX0
— Vishwatma 🇮🇳 (@HLKodo) February 3, 2021
சமீபத்தில் இந்துக்களைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் கொச்சைப்படுத்தி பேசியதற்காக உயர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய சர்ச்சைக்குரிய பிரபல கிறிஸ்தவ சுவிஷேகர் மோகன் சி. லசாராஸ் மனைவியின் தங்கை அருள்மதி ஏசுவடியாளின் கணவர் தான் இந்த பிஷப் காட்ப்ரே நோபுள். இவர் 'ஜீசஸ் சேவ்ஸ்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி திருநெல்வேலியின் இட்டேரி கிராமத்தில் ஒரு "தூய திரித்துவ பேராலயத்தை" நிறுவி இருக்கிறார். தேசிய மக்கள் சக்தி கட்சி என்ற கட்சியின் சார்பில் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் நின்று படுதோல்வி அடைந்திருக்கிறார்.
பிப்ரவரி 3ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல முதல்வரை தேர்ந்தெடுக்க பொது ஜெபம் செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னதாகப் பேசிய பிஷப் காட்ப்ரே நோபுள் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறித்து பேசினார். இந்து மதத்தில் தலித்தாக இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய 99 சதவிகிதம் பேர் தங்கள் உண்மை மதத்தை (கிறிஸ்தவம்) அரசாங்கப் பதிவுகளில் பதிவு செய்யவில்லை என்றும், சலுகைகள் பறிக்கப்படும் என்பதால் அவர்கள் க்ரிப்டோக்களாகத் தொடர்வதாகவும் வெளிப்படையாகவே தெரிவித்தார். கிறிஸ்தவர்கள் சென்னையில் மட்டுமே பத்தாயிரம் திருச்சபைகளும், அதே எண்ணிக்கையிலான பாஸ்டர்களுன் இருப்பதாகவும் தெரிவித்தார்.