அசுரர்களின் கதறல் ஒலிக்க தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையப்போகும் "வேல் யாத்திரை".!
அசுரர்களின் கதறல் ஒலிக்க தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையப்போகும் "வேல் யாத்திரை".!
பா.ஜ.க'வின் வெற்றி திருப்புமுனை'களின் பின்புலத்தில் கண்டிப்பாக யாத்திரைகளின் வரலாறு இருக்கும் இந்திய அளவில். குடும்ப அரசியலின் ஆதிக்கத்திலும், ஊழல் ராஜாங்கத்திலும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் மக்களை இந்த யாத்திரைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வைத்துள்ளதை வரலாற்று நிகழ்வுகள் கூறுகின்றன.
1990'ல் அத்வானி அவர்கள் தொடங்கி வைத்த யாத்திரை மிக முக்கியமானது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி 1990'ம் ஆண்டு ரத யாத்திரை புறப்பட்டார். குஜராத் மாநிலம் சோம்நாத் என்ற இடத்தில் இருந்து அயோத்தி நோக்கி சென்றார். இதில் பல்வேறு இடர்பாடுகள், கைது, கலவரம் என ஒட்டுமொத்த நாட்டையும் பரபரப்புக்கு ஆளாக்கியது.
தங்க நிறத்தில் ஜோடிக்கப்பட்ட நவீன ரதத்தை சுற்றி காவிக் கொடிகள் பறக்க, "ராமர் கோவிலை அயோத்தியில் எழுப்ப வேண்டும்" என்று முழங்கிக்கொண்டிருந்தது அந்த யாத்திரையில் பங்கேற்ற காவிகளின் கூட்டம். அவர்களின் அட்டவணைப்படி, அயோத்தியில் ஆரம்பித்து ஆறு மாநிலங்கள் வழியாக வந்து, கடைசியில் கேரளாவிலிருந்து நெல்லை வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து, இராமேஸ்வரத்தில் அவர்களின் ரத யாத்திரையை முடித்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தனர். அதன்படியும் அவர்கள் திட்டமிட்டபடி சில இடங்களில் தடைபட்டாலும் யாத்திரை வெற்றிகரமாக முடிந்தது.
அவ்வாறு வெற்றிகரமாக முடிக்கப்பட்ட யாத்திரையின் வேண்டுதல் பலனாக சரியாக 20 ஆண்டுகள் கழித்து இன்று ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மற்றொன்று 2011 ஆண்டு நடந்த 'ஏக்தா யாத்திரை', இளைஞர் பிரிவு தேசியத் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான அனுராக் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற யாத்திரை பேரணி கொல்கத்தா'வில் இருந்து தொடங்கியது. அதன் பயணமானது மேற்கு வங்காளத்தில் துவங்கி ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா வழியாக பயணப்பட்டு இறுதியாக ஸ்ரீநகரில் ஜனவரி 26'ம் தேதி பேரணியை முடித்து இந்திய தேசியக் கொடியை 26 ஜனவரி 2011 இந்தியாவின் குடியரசு தினமான அன்று ஏற்ற திட்மிட்டு பேரணி நடைபெற்றது. ஆனால் அப்போதைய ஆளும் காங்கிரஸ் இந்த பேரணியை நடைபெறவிடாமல் தடுத்தது.