செஞ்சட்டை பேரணியில் இந்து கடவுளை அவமதித்த தி.க'வினர் மீது வழக்கு - இறங்கி அடித்த இந்து மக்கள் கட்சி

Update: 2022-06-05 05:57 GMT

இந்து மத கடவுள்களை தொடர்ந்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வந்தது.

மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மதுரை காளவாசல் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி செஞ்சட்டை பேரணி ஒன்று நடத்தினர். அதில் 2 கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தை, தி.க. உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்றவர்கள் இந்து மத கடவுள்கள் குறித்து அவதூறு கோஷங்களை எழுப்பினர். இது தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து இந்து மத கடவுள்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். அதன்படி பேரணியில் பங்கேற்ற வெங்கடேசன் எம்.பி., உள்ளிட்ட சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர், மாவட்ட தலைவர் தலைமையில் மதுரை மாநகர போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதன் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் கமிஷ்னர் உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற தி.க.வினர் மீது மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Source: Maalaimalar

Image Courtesy: Dinamani

Tags:    

Similar News