ஆளுநர் மாளிகையில் உளவு பார்க்க ஆளை நியமித்த தி.மு.க - கொத்தாக தட்டி தூக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி - திடுக்கிடும் தகவல்கள்
ஆளுநர் மாளிகையை தி.மு.க அரசு வேவு பார்த்த விவகாரம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் மாளிகையை தி.மு.க அரசு வேவு பார்த்த விவகாரம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டதில் இருந்தே ஆளும் தி.மு.க அரசிற்கும் ஆளுநருக்கு இடையில் அவ்வப்போது கருத்து மோதல் வெடித்து வருகின்றது. குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் பற்றி விழாக்களில் பேசுவதும், தமிழகத்தின் பிரிவினைவாதிகள் பற்றிய விவரங்களை திரட்டுவதும் தனது வேலைகளில் மும்முரமாக இருப்பதால் தி.மு.க அதனை பொறுக்க முடியாமல் தனது கூட்டணி கட்சிகளை வைத்து எதிர்கருத்துக்களை பரப்பி வருவதையும் தொடர்ந்து செய்து வருகிறது.
இந்த நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை உரையாற்ற தி.மு.க அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆளுநருக்கு தயாரித்து கொடுத்த உரையில் தி.மு.க அரசை புகழ்ந்து நிறைய வார்த்தைகள் இருந்த காரணத்தினால் அதனை என்னால் படிக்க முடியாது என ஆளுநர் அந்த வார்த்தைகளை தவிர்த்தார். குறிப்பாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஆஹா! ஓஹோ! என இருக்கிறது என தி.மு.க அரசு கூறியதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவே இல்லை!
இந்த நிலையில் ஆளுநர் வரிகளை தவிர்த்தது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் உரை வாசித்துக் கொண்டிருக்கும் போதே சட்டசபையை விட்டு வெளியேறார், உடனே திமுக அரசு ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. அன்று முழுவதும் சமூக வலைதளங்களில் தி.மு.க ஐடி விங் பிரிவை சேர்ந்தவர்கள் 'கெட் அவுட் ரவி' என ட்ரெண்டிங் செய்தார்கள். மேலும் அன்று இரவே தி.மு.க தரப்பில் 'கேட் அவுட்ரவி' என போஸ்டர் அடித்து சென்னை நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.