'அடக்கி வாசிக்கணும் தம்பி'- உதயநிதிக்கு அறிவுரை கூறும் தி.மு.க காரர்.!
'அடக்கி வாசிக்கணும் தம்பி'- உதயநிதிக்கு அறிவுரை கூறும் தி.மு.க காரர்.!
பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத தி.மு.க, மறுபடியும் ஜெயித்து ஆட்சிக்கு வரும் முன்னரே வந்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு அவ்வப்போது ட்ரெய்லர் காட்டுவது வழக்கம். 2006-11 இல் அவர்கள் காட்டிய முழு படத்தையும் பார்த்து தான் பத்து வருடங்களாக தி.மு.க ஆட்சி என்றாலே மக்கள் அலறியடித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி தலைவர் ஆக்கி ஸ்டாலினுக்கு அடுத்தபடியான கட்சி 'வாரிசு' இவர்தான் என்று தம்பட்டம் அடிக்காத குறையாக அறிவித்து விட்டார்கள்.
கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாரும் கூட தங்களுடைய பிறந்த நாளில் உதயநிதியிடம் வாழ்த்து பெற அவரது இடங்களுக்குச் சென்று வந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சிப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், ஒரு இடத்தில் ஸ்பெஷல் டிஜிபி ராஜேஷின் பெயரைக் குறிப்பிட்டு, நாங்கள் ஆட்சிக்கு விரைவில் வந்து விடுவோம் நாங்கள் பார்க்காத காவல்துறையா என்றெல்லாம் மிரட்டல் தொனியில் பேசியது பலத்த கண்டனங்களை வரவைத்தது.
இதை குறித்து தினமலர் நாளிதழில், வாசகர் பக்கம் ஆன, 'இது உங்கள் இடத்தில்' ஈமெயில் அனுப்பியுள்ள திருப்பூரைச் சேர்ந்த கலையரசன் என்பவர், தானும் ஒரு தி.மு.ககாரன் என்றும் அரசியலில் தனக்கு பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். உதயநிதியின் பேச்சுக்கு அவர் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலீசாரிடம் எந்தவிதமான வம்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுரை கூறிய அவர், தி.மு.க ஆட்சிக்கு வரப்போகிறது என்று போலீஸ் அதிகாரிகள் அஞ்சி நடுங்கி இருக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கருதுவதாக கூறினார்.