தி.மு.க., பிளவு போகப் போக தெரியும்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து.!

தி.மு.க., பிளவு போகப் போக தெரியும்.. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து.!

Update: 2021-01-04 14:33 GMT

திமுக உடைந்துவிட்டது என மதுரையில் மு.க.அழகிரி தலைமையில் கூடிய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதன் விளைவு போகப் போகத்தான் தெரியும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசுத் தொகை மற்றும் பொங்கல் தொகுப்புகளை இன்று முதல் வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துகொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது: பொங்கல் பரிசு தொகுப்பு அளிக்கும் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இது மக்கள் மத்தியில் வெறுப்பைத்தான் ஏற்படுத்தியுள்ளது. திமுக உடைந்துவிட்டது என மதுரையில் மு.க.அழகிரி தலைமையில் கூடிய கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இதன் விளைவு போகப் போகத் தெரியும். அதிமுக அரசை குறை சொல்லி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் அவருக்கு இருக்கின்ற வாக்குகளும் போய்விடும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News