'கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினா முக்கிய பொறுப்பு' - சிறப்பு சலுகை கொடுத்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Update: 2022-05-31 07:33 GMT

கடலூர் கிழக்கு மாவட்ட தி.முக. சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் வடலூரில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. கட்சியியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஆட்சிக்கு வந்த உடனே வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. நிறைவேற்றி வருகின்றது. அதில் மகளிருக்கு இன்னும் ரூ.1,000 வழங்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் பேசும் பொருளாக அமைந்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறோம்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் வருகின்ற 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. எனவே அதனை நாமும் கொண்டாட வேண்டும். கடலூரில் அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் படத்தை வைத்து கொண்டாட வேண்டும். யார் சிறப்பாக பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார்களோ அவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றார். இதனை கேட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். பிறந்த நாள் விழாவை எப்படி கொண்டாடுவது என்று இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டனர் என்று கூறலாம்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:The New Indian Express

Tags:    

Similar News