சென்னை: பேருந்து நிலையத்தில் தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை!

Update: 2022-04-03 11:15 GMT

அதிகளவு மக்கள் கூடும் இடமான சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் சவுந்தரராஜன் என்பவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கொண்டு வந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் சவுந்தரராஜன் மீது பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதில் அவர் நிலைக்குலைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

பொதுமக்கள் கூடும் பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மக்கள் வெளியில் நடமாடுவதற்கு பயந்து வாழ்ந்து வரும் நிலை உருவாகியுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News