எதிர்த்த தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலமே கட்சியின் 93% நிதியை திரட்டிய தி.மு.க-வின் பாசாங்குத்தனம்!
எதிர்த்த தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலமே கட்சியின் 93% நிதியை திரட்டிய தி.மு.க-வின் பாசாங்குத்தனம்!
ஒரு அரசியல் கட்சிக்கு பொதுத்தளத்தில் தெரியப்படுத்தாமல்(anonymous) நன்கொடை வழங்க பயன்படும் இந்த திட்டம், கருப்பு பணத்தில் இல்லாமல் சட்ட ரீதியாக நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கிறது. பொதுத் தளத்திற்கும், RTI சட்டத்தின் கீழ் இவை வராவிட்டாலும், பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழியாக மட்டுமே விநியோகிக்கப்படும் இத்தகைய பாத்திரங்களில் சீரியல் எண்கள் குறிப்பிடப்பட்டு அவை ஆடிட் செய்யப்படவும், கண்காணிக்கபடவும் வழிவகை செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு முறையிட்டு அது இன்னும் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் எகானமிக்டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் 2019 - 2020-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க தனக்கு வந்த தேர்தல் நிதிகளில் கிட்டத்தட்ட 93 சதவிகிதத்தை இத்தகைய தேர்தல் பத்திரங்களில் இருந்து பெற்றுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. தாங்கள் சேகரித்த 48.3 கோடி ரூபாய் நன்கொடை நிதியில் 45.5 கோடி ரூபாயை இத்தகைய தேர்தல் பத்திரங்களின் மூலமாக மட்டுமே பெற்றுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தி.மு.க அனுதாபிகளும், ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் பெரும்பாலும் இத்திட்டத்தை விமர்சித்து வந்துள்ளனர். ஒரு படி மேலே போய், தி.மு.கவின் முக்கியத் தலைவரான PTR பழனிவேல் தியாகராஜன், ட்விட்டரில் தொடர்ந்து இந்த தேர்தல் பத்திர முறைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.