போலிகளுக்கு கடவுள் முருகன் வரம் கொடுக்க மாட்டார்.. ஸ்டாலினை விமர்சித்து முதலமைச்சர் பேச்சு.!

போலிகளுக்கு கடவுள் முருகன் வரம் கொடுக்க மாட்டார்.. ஸ்டாலினை விமர்சித்து முதலமைச்சர் பேச்சு.!

Update: 2021-01-24 09:56 GMT

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் அவருக்கு தமிழ் கடவுள் வரம் அளிக்க மாட்டார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஸ்டாலின் கையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து அவரது கையில் வெள்ளி வேலை பரிசாக அளித்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளானது. இந்துக்கள் கடவுளை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, தற்போது வேலை கையில் எடுத்துள்ளது இந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவையில் 2வது நாளாக இன்றும் முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை புலியகுளம் பகுதியில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

பெண்கள் மிகவும் பாதுகாப்பாக வாழும் நகரம் கோவை, அ.தி.மு.க. அரசு எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பை அளித்து வருகிறது. திமுகவினர் மத்தியில் இருந்து பெண்களை பாதுகாப்பதுதான் மிகவும் முக்கியமான பிரச்னையாக உள்ளது. மேலும், கையில் வேல் எடுத்த ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். அ.தி.மு.க.வுக்கு தான் வரம் கொடுக்க போகிறார். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Similar News