"ஆன்மீகத்தால் தி.மு.கவை வீழ்த்த முடியாது" என்ற ஸ்டாலின் - தோல்வி பயம் வந்துவிட்டதா?

"ஆன்மீகத்தால் தி.மு.கவை வீழ்த்த முடியாது" என்ற ஸ்டாலின் - தோல்வி பயம் வந்துவிட்டதா?

Update: 2020-12-13 07:00 GMT

தமிழகத்தில் ஆன்மீக அரசியல் எந்தளவிற்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை இன்றைய தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்களின் பேச்சில் இருந்து தெரிகிறது. மேலும் தி.மு.க தோல்விக்கு காரணம் ஆன்மீகமாகவே இருக்கும் என்பதை தி.மு.க தலைவர் ஸ்டாலின் உணர்ந்துள்ளதாக தெரிகிறது.

இன்று ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க.வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வழியே இன்று பேசினார்.

அப்போது பேசிய அவர், "ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டம் தி.மு.க ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க'வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. ஆன்மிகத்தை காரணம் காட்டி தி.மு.க'வை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க"என அவர் பேசியுள்ளார்.

ஆன்மீக அரசியலில் தாக்கம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார் என தெரிகிறது.

Similar News