மக்களுக்காக ஈகோவை விடுகிறேன்.. ரஜினியுடன் கைகோர்க்க தயார்.. கமல்.!

மக்களுக்காக ஈகோவை விடுகிறேன்.. ரஜினியுடன் கைகோர்க்க தயார்.. கமல்.!

Update: 2020-12-15 18:48 GMT

மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் ரஜினியும் இணைந்து தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்: “அதிமுக கட்சிக்கு நீட்சியாக நான் செல்லவில்லை எம்.ஜி.ஆருக்கு நீட்சியாக எந்த நடிகரும் இருக்கலாம். எம்ஜிஆர்., அதிமுகவின் திலகம் அல்ல, மக்கள் திலகம். 

தென் தமிழக சுற்றுப் பயணத்திற்கு செல்ல அனுமதி கொடுத்தது ஏன்? பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது ஏன்? இதுவே என் கேள்வி. ஒவ்வொரு இடத்திலும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

மக்களுக்காக எந்த ஈகோவையும் விட்டுக்கொடுத்து நானும் நடிகர் ரஜினியும் இணைந்து களம் இறங்க தயார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சினிமாத்துறையில் இருவரும் வெவ்வேறு துருவங்களாக செயல்பட்டவர்கள் தற்போது அரசியல் கட்சிகளை ஆரம்பித்து உள்ளனர். இவர்களுக்கு மக்கள் மத்தியில் எது போன்ற செல்வாக்கு உள்ளது என்று அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை பொறுத்து அமைகிறது.
 

Similar News