கோவையில் அண்ணாமலை பேனரை அகற்ற சொல்லிய காவல்துறை - போராட்டத்தில் பா.ஜ.க'வினர்

கோவையில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றுமடைந்ததால் கோபமடைந்த பா.ஜ.க'வினர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-17 13:43 GMT

கோவையில் அண்ணாமலையை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றுமடைந்ததால் கோபமடைந்த பா.ஜ.க'வினர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செம்பட்டி காலணியில் பா.ஜ.க சார்பில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு வாகனம் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்க பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பா.ஜ.க'வினர் பல இடங்களில் கட்சி கொடிகள் பேனர்கள் கட்டி அண்ணாமலையை வரவேற்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காவல்துறையினர் அவற்றை அகற்றுமாறு வலியுறுத்திய காரணத்தினால் வேறு வழியின்றி அகற்றினர் இதனால் அங்கு பா.ஜ.க'வினருக்கும், காவல்துறை காவலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதனை கண்டித்து காவல் துறையை கண்டித்து பா.ஜ.க'வினர் பேரூர் சாலையில் திடீரென அமர்ந்து சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Source - News 18 Tamil

Similar News