உண்டியல் பணத்தில் பட்டர் முறுக்கு, இன்னோவா காரு! கொழிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள் - ஆதாரங்களுடன் போட்டுத்தாக்கிய அண்ணாமலை
அறநிலையத்துறை பக்தர்களின் காசை முழுங்கி ஏப்பம் விடும் துறையாக இருக்கிறது என இத்தனைநாள் பக்தர்கள் கூறிவந்த நிலையில் முதன்முதலாக ஒரு அரசியல் கட்சி
அறநிலையத்துறை பக்தர்களின் காசை முழுங்கி ஏப்பம் விடும் துறையாக இருக்கிறது என இத்தனைநாள் பக்தர்கள் கூறிவந்த நிலையில் முதன்முதலாக ஒரு அரசியல் கட்சி அறநிலையத்துறையின் அட்ராசிட்டிகளை அம்பலப்படுத்தி போராட்டத்தில் குதித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பாஜகவினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து அறநிலையத்துறையிடம் இருந்து கோவில்களை மீட்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் அறநிலையத்துறை பக்தர்கள் காசை எப்படி எல்லாம் முழுங்கி ஏப்பம் விடுகிறது, கோவில் சொத்துக்கள் எப்படி பராமரிக்காமல் அழிக்கப்படுகின்றன, ஆளும் திமுக அரசு கோவிலை எப்படி தனது அரசியலுக்காக பயன்படுத்துகிறது என ஆதாரங்களுடன் அண்ணாமலை விளக்கினார்.
இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது, 'அறநிலையத்துறை முற்றிலும் பக்தர்கள் காணிக்கை பணத்தை சுரண்டும் துறையாக இருக்கிறது. அறநிலையத்துறை வசமுள்ளள திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது. கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது. புராதான கோவில்களின் நகைகள் உருக்கப்படுகிறது. இதெல்லாம் HR & CE எனப்படும் அறநிலையத்துறை வசம் நம் கோவில்கள் உள்ளதால் நடக்கும் அக்கிரமங்களாகும்
கடந்த சில நாட்கள் முன்பு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் 270 அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டம் நடத்தினார்கள், அதில் கின்லி வாட்டர் பாட்டில், பட்டர் முறுக்கு, ஸ்பெஷல் மிக்ஸர், ட்ரய் குலாப் ஜாமூன், நல்ல ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட சாப்பாடு என கோவில் பணத்தில் சாப்பிட்டுள்ளார்கள். இதற்கான செலவு எங்கிருந்து எடுத்துள்ளார்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பார்த்தால் கோவில் உண்டியலில் பக்தர்கள் உழைத்து கொண்டு வந்து போடும் பணத்தில் இருந்து எடுத்துள்ளார்கள் என தகவல் கிடைத்துள்ளது. இதேபோல் வடபழனி கோவில் உண்டியல் பணத்திலும் அதிகாரிகள் கூட்டம் போடுகிறேன் என்ற கணக்கு காட்டியுள்ளார்கள்.