ஏதே ஈரோட்டுல ஓட்டுக்கு பத்தாயிரமா? திரும்பும் திருமங்கலம் பார்முலா! - கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கும் செந்தில்பாலாஜி
ஈரோடு தேர்தலில் வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்போவதாக பத்திரிக்கையாளர் மணி கூறும் வீடியோ இணையங்களில் வைரலாகிறது.
ஈரோடு தேர்தலில் வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கப்போவதாக பத்திரிக்கையாளர் மணி கூறும் வீடியோ இணையங்களில் வைரலாகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குக்கு 10,000 வரை போட்டியிடும் கட்சிகள் இறைக்கபோகின்றன என அதிரடி தகவல் பரவி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்தவர் தாங்க திருமகன் ஈ.வே.ரா இவர் இப்ப அறிவிச்சுருக்க ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன், திருமகன் ஈ.வே.ரா உடல்நலக்குறைவால காலமானதுனால ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதா அறிவிக்கப்பட்டதுங்க, உடனே தேர்தல் ஆணையம் வர பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் அறிவிச்சது தேர்தல் அறிவிச்சது மட்டும் இல்லாம உடனே அந்த இடத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு வந்துச்சுங்க.
இந்த மாதிரி இருக்கிற நிலைமையில் இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருஷத்துல நாடாளுமன்ற தேர்தல் வரவேற்கும் நிலையில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்ப முக்கியமாகவே பார்க்கப்பட்டது, ஒரு பக்கம் ஈரோடு கிழக்கு திமுக கூட்டணியில் இருந்த தொகுதி இன்னொரு பக்கம் அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனையில் யார் வேட்பாளர் அறிவிக்குறதுன்ற பிரச்சினை, இன்னொரு பக்கம் பாஜக க்கு இது வரபோற நாடாளுமன்ற தேர்தலோட பலப்பரிட்சை இப்படி மூன்று மிகப்பெரிய கட்சிகளுக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியோட இடைத்தேர்தல் ரொம்பவே முக்கியமா பார்க்கப்பட்ட நிலையில இந்த தொகுதியில போட்டியிடும் வேட்பாளர் கண்டிப்பாக கவனம் குவிக்கிற வேட்பாளராக இருப்பாங்க என்று எதிர்பார்ப்பு நிலவி வந்துச்சு.
இப்படி தமிழக அரசியல அடுத்த ரெண்டு மூணு வருஷத்துக்கு நகர்த்தி கொண்டு போற மைப்புள்ளியா ஈரோடு இடைத்தேர்தல் மாறியிருக்கிற நேரத்துல யாருப்பா ஈரோடு தொகுதியுடைய வேட்பாளரா வருவாங்கன்னு சொல்லி எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு! இந்த நேரத்துலதான் இறந்து போன திருமகன் ஈவேரா ஓட தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன காங்கிரஸ் ஓட தலைமை வேட்பாளரா அறிவிச்சிருக்கு. இன்னும் அதிமுக தரப்பில் வேட்பாளர் அறிவிக்கப்படல!