ராகுலை அயல்நாடு சுற்றுலா போகவிடாமல் இந்திய மண்ணில் நடக்க விட்ட பா.ஜ.க'வின் மாஸ்டர் பிளான்
ராகுல் காந்தியின் பல்டிக்கு காரணம் பாஜகவின் '144'ஆ??
ராகுல் காந்தியின் பல்டிக்கு காரணம் பாஜகவின் '144'ஆ??
நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் தற்கொலை செய்துக்கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல் காந்தி.
தமிழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது தினமான நேற்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.
ராகுலின் முகநூல் பதிவு:
"மறைந்த நீட் தேர்வாளரான அனிதாவின் தந்தை டி சண்முகம் மற்றும் அவரது சகோதரர் மணிரத்னம் ஆகியோரை இன்று சந்தித்தார். அவளுடைய கதையும், அவளுடைய குடும்பம் அனுபவிக்கும் சோதனையும் இதயத்தைத் துடைக்கிறது.
நீட் தேர்வு நம் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்துவிட்டது. அத்தகைய தேர்வுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும். அவர்கள் எதேச்சதிகார முறையில் இளைஞர்கள் மீது திணிக்கப்படக்கூடாது, மாறாக அவர்களின் கனவுகளையும் அபிலாஷைகளையும்
நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். இங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
அனிதாவின் குடும்பத்தினருக்கு எனது முழு ஆதரவையும் உறுதியளித்துள்ளேன். அவர்களின் போராட்டத்தில் நான் அவர்களுடன் நிற்கிறேன். அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி." என தன்னுடைய முகநூல் பக்கத்தில் இச்சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ளார்.
2017 உச்சநீதிமன்ற தீர்ப்பும்; காங்கிரஸும்.