தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது தி.மு.க.,தான்.. பா.ஜ., விமர்சனம்.!

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டது தி.மு.க.,தான்.. பா.ஜ., விமர்சனம்.!

Update: 2021-01-02 12:24 GMT

நடிகர் ரஜினியை கட்சி தொடங்கச்சொல்லி பாஜகதான் அழுத்தம் கொடுத்து வருகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், ரஜினி கட்சி தொடங்கவில்லை என்றதும் திமுகதான் ரஜினியை பின்வாங்க வைத்துவிட்டது என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரஜினியின் முடிவால் திமுகவுக்குத்தான் பாதகம் என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: பாஜகதான் ரஜினியை தூண்டியது என்றால் அதே பாஜகவினால் ரஜினியின் பின் வாங்கும் முடிவினை தடுத்திருக்க முடியாதா என்ன? என்று கேள்வி எழுப்பும் சேகர், ரஜினியை ஐதராபாத் அழைத்து சென்று ரத்த அழுத்தம் உள்ளது என்று நாடகம் நடத்தி முதல் காட்சியை முடித்து வைத்துள்ளது திமுக, என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஜினியை பின் வாங்க வைத்து வெற்றி அடைந்து விட்டதாக நினைக்கிறது திமுக. உண்மை என்னவென்றால், திமுக தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டுள்ளது. ரஜினி நின்றிருந்தால் அதிமுக, பாஜக வாக்குகள் பிரிந்திருக்கும். திமுகவுக்கு லாபம் கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Similar News