இந்து துரோகியாக மாறிவிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி.. சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு.!

இந்து துரோகியாக மாறிவிட்டார் ஜெகன்மோகன் ரெட்டி.. சந்திரபாபு நாயுடு கடும் தாக்கு.!

Update: 2021-01-04 10:01 GMT

ஆந்திராவில் இந்து கோயில்கள் சேதப்படுத்தப்படுவதும், இந்து கடவுள்கள் இழிவுப்படுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் ஜெகன்மோகன் மவுனம் காத்து வருகிறார் என தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்ருமான சந்திரபாபு நாயுடு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள விஜயநகரம் மாவட்டத்தில் 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்தம் கோயில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையை, விஷமிகள் சிலர் சமீபத்தில் சேதப்படுத்தினர்.

இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ராமதீர்த்தம் கோயிலுக்கு தனது தொண்டர்களுடன் சென்றார். கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் பணியாளர்களிடம் சேதம் பற்றி கேட்டறிந்தார்.

இதன்பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: கடந்த 18 மாதங்களில் ஆந்திரா முழுவதிலும் 127 கோயில்கள் மற்றும் சுவாமி சிலைகள் இந்து விரோத கும்பல்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஜெகன்மோகன் கிறிஸ்துவர் என்பதற்காக தன் அதிகாரத்தை பயன்படுத்தி மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது. அப்படி செய்வது இந்துக்களுக்கு துரோகம் இழைப்பதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News