ஜெயலலிதா கோயில் திறப்பு விழா.. பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் அமைச்சர்.!

ஜெயலலிதா கோயில் திறப்பு விழா.. பொதுமக்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் அமைச்சர்.!

Update: 2021-01-21 20:18 GMT

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூர் என்ற கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோயில் ஒன்றை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கட்டியுள்ளார்.

இந்த கோயில் திறப்பு விழா 30ம் தேதி வைத்துள்ளார். இதற்கான அழைப்பிதழ்களை ஊர் முழுவதும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி வருகின்றார். அதே போன்று சாத்தூர் எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பிதழை வழங்கினார்.

மேலும், இந்த கோயிலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்கின்றனர். கோயில் திறப்பின்போது ஏழை மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News