'பா.ஜ.க.வின் ஏஜன்டாக ஆளுநர் செயல்படுகிறார்' - புலம்பும் கி.வீரமணி

Update: 2022-04-22 14:55 GMT

தமிழகத்தின் ஆளுநர் பாஜகவின் ஏஜன்ட் போல செயல்பட்டு வருவதாக திராவிட கழக தலைவர் வீரமணி விமர்சனம் செய்துள்ளார். திக சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பயணம் பொதுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற திக தலைவர் வீரமணி பேசியதாவது: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு ரூபங்களில் வந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. அதனை விட கொடிய நோய்தான் நீட் தேர்வு. இதனை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் போது உறவினர்கள் கூட நோயாளிகளை சந்திக்க பயந்து கொண்டிருந்தபோது, முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று நலம் விசாரித்தார். வேறு யாரும் இந்தியாவில் செய்யாத சாதனையை செய்ததாக கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News