"கோஷ்டி அடிதடி இருப்பது நல்லதுதான்" - சமாளித்த கார்த்தி சிதம்பரம் !

Update: 2021-09-26 08:30 GMT

"இப்படி கோஷ்டியா பிரிஞ்சு அடிச்சுக்கிறது காங்கிரஸ் கட்சி உயிரோட்டமாக இருப்பதையே காட்டுகிறது" என கட்சி கூட்டத்தில் தன் முன்னிலையில் தொண்டர்கள் அடித்துக்கொண்டதை சமாளிக்கும் விதமாக கார்த்தி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தொண்டர்களின் அடிதடிக்குப்பின் கார்த்தி சிதம்பரம் எம்.பி. சிவகங்கையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நடந்த மோதல் கட்சி உயிரோட்டமாக உள்ளது என்பதை உணர்த்தி உள்ளது. சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் பதவிக்கு போட்டி இருக்கும். சில சமயங்களில் போட்டி கடுமையாக இருக்கும். கட்சியின் மூத்த தலைவர்களை புறக்கணிப்பதாக உள்ள புகார் அகில இந்திய அளவில் கூட உள்ளது. காங்கிரஸ் கட்சி 125 ஆண்டுகளாக இருக்கும் கட்சி. அது இன்னமும் உயிரோட்டமாகத்தான் உள்ளது. இன்னும் 125 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த கட்சி உயிரோட்டமாகத் தான் இருக்கும்" என கூறியுள்ளார்.

தொண்டர்கள் எம்.பி முன்னிலையில் அடித்துக்கொண்டதை பெருமையாக கூறும் எம்.பி இவர் ஒருவராகதான் இருப்பார்.

Similar News