ஓட்டுக்காக விபூதியை அழிப்போம்! மக்களை குழப்ப வழித்து பூசுவோம்! ஸ்டாலினும்-உதயநிதியும் பார்ட்னர்ஷிப் போட்டு புரளிவித்தை!

ஓட்டுக்காக விபூதியை அழிப்போம்! மக்களை குழப்ப வழித்து பூசுவோம்! ஸ்டாலினும்-உதயநிதியும் பார்ட்னர்ஷிப் போட்டு புரளிவித்தை!

Update: 2020-11-25 10:18 GMT

கொரோனா பரவி வரும் நேரத்தில் அரசின் விதிமுறையை மீறி செயல்படும் உதயநிதி ஸ்டாலின், பணம் கொடுத்து அழைத்து வந்த கூட்டத்திற்கு கொரோனாவை பரிசாக கொடுக்கிறார். இதன் மூலம் மக்களிடத்தில் மேலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. மேலும் அவருடைய வாகனத்தில் எந்தவித பாதுகாப்பும் இன்றி அளவுக்கு அதிகமான ஆட்களை கூட்டி செல்வது தொடர்கிறது என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

ஒரு பக்கம் அவருடைய அப்பா ஸ்டாலின் பெருமகனார் விபூதியை கீழே கொட்டுகிறார். உதயநிதியோ ஆதீனம் சென்று விபூதி வாங்கி பூசிக்கொள்கிறார். ஓட்டுக்காக மக்களை குழப்பும் வேலையை தி.மு.க செய்வது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதிமுகவில் அடிமட்ட தொண்டனும் முதல்வர் பதவிக்கு வரமுடியும் என்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உதாரணம்.

இதே போன்று திமுகவில் வர முடியுமா? மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம்- பா.ஜ.க கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். காரணம் நீர் மேலாண்மை திட்டம் கூவம் நதி தூர் வாரப்பட்டு இன்று நீர் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆவடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 22 குளங்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுகிறது நீர்நிலைகளை ஆக்கிரமித்தது திமுக அதனை மீட்டு அரசு கட்டிடங்களை வழங்கியது கழக அரசு. இதற்கு உதாரணம் ஆவடியில் ரூ.2 கோடி அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மீட்கப்பட்டு அரசு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.

Similar News