எம்.ஜி.ஆர்., 104வது பிறந்த நாள் விழா.. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை.!

எம்.ஜி.ஆர்., 104வது பிறந்த நாள் விழா.. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை.!

Update: 2021-01-17 13:12 GMT

தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் முழுவதும் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். 

அதே போன்று நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட இண்டூர் பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் என்.பி.பெரியண்ணன் மற்றும் நிர்வாகிகள் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

மேலும், பாலவாடி கிராமத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு ஒன்றியத்துணைசெயலாளர் வேடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் புகழ் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக கூறப்பட்டது.

Similar News