பிரதமர் மோடி பற்றி தவறான பதிவு: பா.ஜ.க பதிலடியால் ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டு ஓட்டம் பிடித்த அமைச்சர் மனோ தங்கராஜ்!

பிரதமர் மோடி நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த புதிய பாராளுமன்றத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு செங்கோல் கொண்டு சென்று பிரதமர் மோடியிடம் ஆதினங்கள் வழங்கினர்.

Update: 2023-05-30 04:04 GMT

பிரதமர் மோடி நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த புதிய பாராளுமன்றத்தை நேற்று திறந்து வைத்தார். அப்போது தமிழ்நாட்டில் இருந்து செங்கோல் டெல்லிக்கு கொண்டு சென்று பிரதமர் மோடியிடம் ஆதினங்கள் வழங்கினர். அதனை பெறுவதற்கு முன்னர் பிரதமர் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கிவிட்டு பின்னர் செங்கோலை கையில் ஏந்திச்சென்றார்.

இந்நிலையில், தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் மூச்சு இருக்கா.. மானம்.. ரோசம் என்று ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., உட்பட பலர் அமைச்சருக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

மேலும், பா.ஜ.க.வை சேர்ந்த பலர் ட்விட்டரில் அமைச்சரின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்திருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பதிவை நீக்கம் செய்தார். பா.ஜ.க.வினர் கடுமையான பதிலடியை ட்விட்டரில் பதிவு செய்வார்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News