மணல் விவகாரத்தில் குதித்த அமலாக்கத்துறை...! ஆட்சியே கவிழப்போகும் அபாயம்...! பரபர தகவல்கள்..!

Update: 2023-09-17 14:07 GMT

மணல் மாஃபியா ரெய்டால் ஆட்சியே கவிழப்போகிறது என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது...!

தமிழகத்தில் கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சில இடங்களில் 36 மணி நேரம் மணல் மாஃபியா சார்ந்த நபர்கள் மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை கடுமையான சோதனையில் ஈடுபட்டது. பல இடங்களில் அமராக்கத் துறை நாள் கணக்கில் குறி வைத்து இந்த சோதனையில் இறங்கியதாகவும் தினமும் அரசுக்கு முறையாக கணக்கு காட்டாமல் இந்த மாஃபியா செயல்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தமிழகத்தில் திருச்சி, கரூர், நாமக்கல், திருவையாறு, கொள்ளிடம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் விற்பனை நடைபெற்றாலும், இந்தப் பகுதிகளில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மணல் கொள்ளையில் தனிநபர்கள் ஈடுபட்டது அமலாக்கத்துறை சோதனையின்போது வெளிப்பட்டுள்ளது.

திருச்சி திருவானைக்காவல் மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது. முதல்நாள் காலை 9 மணிக்கு துவங்கிய சோதனை இரவு வரை நீண்டது. தினமும் காலை 11 மணிக்குள் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் இந்த மணல் குவாரியில் பணம் வசூல் ஆகியது தெரியவந்திருக்கின்றது.

குவாரியில் உள்ள ஒரு கண்டெய்னர் அறையில் பணம் எண்ணுவதற்காக 28 இயந்திரம் உள்ளே வைக்கப்பட்டுள்ளது எனவும் சோதனையில் தெரியவந்தது. அரசு நிர்ணயித்த மூன்று யூனிட்டிற்கு 624 ரூபாய் மணல் விலையாம். யாருக்கும் நேரடியாக குவாரியில் மணல் கொடுக்கப்படுவதில்லை. ஆன்லைன் மூலமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இங்கே அமலாக்கத்துறை சோதனையில் டோக்கன் கொடுப்பதற்கு ஒரு ஏஜென்ட்டும், அவருக்கும் ஒரு கமிஷன் என்ற தகவலும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் கொடுக்கும் எட்டாயிரம் ரூபாய்க்கு மணல், 16 ஆயிரம் ரூபாய்க்கு உள்ள மணல் இந்த யூனிட்டிகளின் அளவு இதற்கான தொகை எதுவும் நீர்வளத்துறை அதிகாரிகளோ, கனிம வளத்துறை அதிகாரிகளோ யாரும் கணக்கிடுவதில்லை. ஒரு தனிநபர் நேரடியாக ஆயிரக்கணக்கான லாரிகளை வைத்து கொள்ளிடம் ஆற்றில் அரசு பர்மிட் இல்லாமலேயே மணல் அள்ளுவது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு இந்த குவாரியில் 10 கோடி ரூபாய் வரை வசூல் என அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், தங்களது காரில் எடுத்துச் சென்றனர்.

மேலும் இந்த ஆவணங்களை வைத்து அடுத்தடுத்த கட்ட விசாரணை ரெய்டுகள் தொடரும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஒரு பகீர் தகவலை நேற்று வெளியிட்டுள்ளார், இந்த மணல் ரெய்டு என்பது ஆட்சியை கவிழ்க்கத்தான் அது புரியாமல் இவர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் வீதம் மணல் அள்ளப்பட்டிருக்கிறது. இதில் நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு மாதத்திற்கு 10 கோடி ரூபாய் கமிஷன் சென்றுள்ளது, 14 மாதமாக இந்த வேலை நடக்கிறது மொத்தம் 140 கோடி ரூபாய் அமைச்சர் துரைமுருகனுக்கு கமிஷனாக சென்றுள்ளது.

இதை எல்லாம் அமலாக்கத்துறை இப்பொழுது கையில் எடுத்திருப்பதே ஆட்சியை கவிழ்க்கத்தான். கடந்த முறை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று விட்டு வந்த உடன்தான் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டார், இந்த நிலையில் இந்த முறை அமலாக்கத்துறை ரெய்டு நடந்து கொண்டிருக்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்று வேறு சவுக்கு சங்கர் குறிப்பிட்டது அறிவாலயத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது.

இருப்பினும் இது குறித்த தகவல்கள் மற்றும் விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Similar News