மேற்கு வங்காளத்தை விட்டு வெளியேறும் பிரிட்டானியா.. அரசியல் காரணங்களால் மூடப்பட்டதா?

Update: 2024-06-26 11:30 GMT

FMCG துறை ஜாம்பவானான பிரிட்டானியா, நாடு சுதந்திரம் அடைந்த 1947ல் திறக்கப்பட்ட தனது தொழிற்சாலைகளில் ஒன்றை மூடப் போகிறது. அதுவும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்த வரலாற்று தொழிற்சாலை பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் பழமையான உற்பத்தி ஆலை ஆகும். மேற்கு வங்காளத்தில் உள்ள பிரிட்டானியா நிறுவனம் தான் தன்னுடைய தொழிற்சாலையை மூட இருக்கிறது. இந்தியாவின் முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், வங்காளத்தை மூன்றாவது பெரிய சந்தையாகக் கருதுகிறது. இதன் மூலம் ரூ.900 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது.

மேலும் இந்த தொழிற்சாலை மூடப்படுவதால் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்படாது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, பிரிட்டானியா பீகார், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தொழிற்சாலையை வைத்து சிறப்பாக இயக்கி கொண்டு இருக்கிறது. 2016 ஆம் ஆண்டில், நிறுவனம் மேற்கு வங்காளத்தில் இரண்டாவது யூனிட் திட்டங்களை அறிவித்தது, 2018 ஆம் ஆண்டிற்குள் செயல்படத் தொடங்கும் என்று எண்ணியது. இருப்பினும், மாநிலத்தில் உள்ள இடங்களைத் தேடிய போதிலும், திட்டம் நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக, நிறுவனம் தனது ஆலையை அஸ்ஸாமில் 2018 இல் திறந்து, சமீபத்தில் 2023 டிசம்பரில் பீகாரிலும் யூனிட்டை நிறுவியது.


மம்தா பானர்ஜி தலைமையிலான TMC அரசாங்கத்தின் வணிக விரோதக் கொள்கைகள் மற்றும் அணுகுமுறை காரணமாக மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறும் முதல் நிறுவனம் பிரிட்டானியா அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிங்கூரில் உள்ள டாடா நானோ நிறுவனம் தொடர்பான சர்ச்சைகளால் டாடா குழுமம் மாநிலத்தை விட்டு வெளியேறியது. இதற்கிடையில், மேற்கு வங்காள பாஜகவும் பிரிட்டானியா வெளியேறுவதைத் தாக்கியுள்ளது. "வங்காளத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்தல், கமிஷன் எடுப்பது மற்றும் யூனியன் கொள்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதாகவும், இதன் காரணமாக பல தொழில்கள் தொடர்ந்து மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாகவும்" பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் தெரிவித்துள்ளார்.

Input & Image courtesy:Opindia News

Tags:    

Similar News