அலட்சிய மாடல் அரசால் பலியான அப்பாவி மாணவர்கள்:ரயில்வே புகாருக்கு முதல்வர் பதில் என்ன?
கடலூர் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்ற வகையில் ரயில்வேத்துறை முன்வைத்து குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வலியுறுத்தியுள்ளார்
மேலும் அவர்,கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் செம்மங்குப்பம் கிராமத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது, விழுப்புரம்-மயிலாடுதுறை பேசஞ்சர் ரயில் மோதியதில் மூன்று அப்பாவி பள்ளிக் குழந்தைகள் இறந்து போனது ஆழ்ந்த துயரத்தையும் கடும் வலியையும் ஏற்படுத்துகிறது
ஜூலை 8-ஆம் தேதி காலை 7.45 மணிக்கு இந்த துயரக் கொடூரம் நடந்துள்ளது. இந்த அசம்பாவிதத்தில் வேனில் இருந்த ஒரு மாணவரும் வேன் ஓட்டுனரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் காலை 7.40 மணிக்கு பேசஞ்சர் ரயில் வரும் என்பதை அறிந்த அந்த கேட் கீப்பர் கேட்டை மூட முயன்றதாகவும் அப்போது இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளி வேன் ஓட்டுனரும் ரயில் வருவதற்குள் கடந்து விடுகிறோம் திறந்து விடுங்கள் என கேட் கீப்பரை வற்புறுத்தியதாகவும் மறுக்க முடியாமல் கேட் கீப்பர்,கேட்டை திறந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
கேட் கீப்பரின் இந்த குற்றத்திற்கு அவர் மீது தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.அதே நேரம் காலை நேரம் அதுவும் ரயில் வருகிற நேரத்தில் சில நிமிடங்கள் கூட காத்திருக்க முடியாமல் ரயில்வே கேட்டை திறக்கச் சொல்லி வற்புறுத்தும் அளவுக்கு நமது மக்களிடம் பொறுமையின்மை அதிகரித்து விட்டதோ என்ற கவலையும் இந்த சம்பவத்தை ஒட்டி எழுகிறது பொது மக்களின் உளவியலில் ஏற்பட்டுள்ள அவசரத் தன்மைதான் பல அபாயங்களுக்கு வித்திடுகிறது