மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளரை இடைநீக்கம்:அமோக விற்பனையில் கள்ளச்சந்தை மதுபானம்!

Update: 2025-07-21 15:57 GMT

மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடனேயே மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடத்தப்படுவதாக காணொளி வெளியாகி உள்ளது 

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பட்டப்பகலில் பொதுவெளியில் டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் படுஜோராக இப்படி சட்டவிரோத மதுவிற்பனை செய்ய ஏதுவாக இருக்கத் தான் ஒரு நேர்மையான அதிகாரி மீது போலிக்குற்றச்சாட்டுகளை வைத்து திமுக அரசு இடைநீக்கம் செய்ததா இந்த சட்டவிரோத மது விற்பனையை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் அறிவாரா இன்று கள்ளச்சந்தையில் மதுவிற்பனை நாளை என்ன சுந்தரேசன் அவர்கள் மூடிய 23 சட்டவிரோத பார்களின் திறப்பு விழாவா

சமூகநீதி குறித்து மேடைகளில் விளம்பரப்படுத்திவிட்டு நேர்மையான காவல் அதிகாரிகளை விரட்டியடித்துவிட்டுcபின்பக்கம் சட்டவிரோத சாராய விற்பனையை ஊக்குவித்து சட்டம் ஒழுங்கை சீரழிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை தமிழகத்திற்கு என்றும் விடிவு காலம் இல்லை என கண்டனம் தெரிவித்துள்ளனர் 

Tags:    

Similar News