போடி தொகுதியில் இன்று வேட்புமனுதாக்கல் செய்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.!
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் துவங்கப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் செய்ய தயாராகியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் துவங்கப்படுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் இன்று முதல் வேட்புமனுத்தாக்கல் செய்ய தயாராகியுள்ளனர்.
அதே போன்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள போடி நாயக்கனூர் தொகுதியில் இன்று பிற்பகல் 1 மணிக்கு வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்.
இன்று வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள் என்பதால் இன்றை தினமே வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். இதே போன்று மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுக வேட்பாளர்களும் வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.