ஒரு வாரம்தான்! நெல்லை ஆட்சியருக்கு வார்னிங் கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ!

ஒரு வாரம்தான்! நெல்லை ஆட்சியருக்கு வார்னிங் கொடுத்த தி.மு.க. எம்.எல்.ஏ!

Update: 2021-01-19 19:20 GMT

நெல்லை ஆட்சியர் விஸ்ணுவுக்கு தி.மு.க எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை முதல் தென்காசி வரையில் சாலைகள் குண்டு குழியுமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எம்.எல்.ஏ நெல்லை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாலையை சீரமைப்பதற்காக ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன்.

சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அப்படி இலலை என்றால் எனது தலைமையில் போராட்டம் வெடிக்கும். இன்னும் ஒருவாரத்திற்குள் சரிசெய்யா விட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன். அனுமதி அளிக்கவில்லை என்றால் சாலை மறியல் நடைபெறும் என்று காட்டமாக எச்சரிக்கை செய்துள்ளார்.

அராஜகம் செய்வது தி.மு.கவிற்கு ஒன்றும் புதிதல்ல. எங்கு பார்த்தாலும் திருட்டு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றில் தி.மு.கவினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு எம்.எல்.ஏவாக உள்ளவரே ஆட்சியருக்கு மிரட்டல் விடுகிறார். இன்னம் இவர்கள் கையில் ஆட்சி சென்றால் தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்கள் அதிகரித்துவிடும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 

Similar News