நாடு முழுவதும் குடும்ப ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டி வருகின்றனர்.. அமித்ஷா பேச்சு.!

நாடு முழுவதும் குடும்ப ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்டி வருகின்றனர்.. அமித்ஷா பேச்சு.!

Update: 2020-11-21 18:32 GMT

நாடு முழுவதும் குடும்ப ஆட்சிக்கு மக்கள் சரியான பாடத்தை தேர்தல் மூலம் புகட்டி வருகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் ஊழல் ஆட்சி செய்து வந்த குடும்ப ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் குடும்ப ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்.

மேலும், மத்தியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப ஆட்சியை தூக்கி எறிந்துள்ளனர். தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப ஆட்சியை அகற்றி மக்கள் சரியான பாடத்தை புகட்டியுள்ளனர். வருகின்ற தேர்தலிலும் இது தொடரும் என்பது எனக்கு தெரியும். மக்கள் குடும்ப ஆட்சியை நிராகரிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News