உள்ளாட்சியில் வெற்றி: எங்கள் கட்சிக்காரர்களை வாழ்த்த விரும்புகிறேன்! பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Update: 2021-10-20 03:38 GMT

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் 381 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் ஒன்றிய கவுன்சிலர்கள் 8 பேர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் 41 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 332 பேர் என வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற அனைவரும் கடந்த 18ம் தேதி சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 


இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் உள்ளாட்சியில் வெற்றி பெற்ற 381 பேருக்கும் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: PM Modi Twiter

Tags:    

Similar News