தமிழகத்தில் வேட்பாளராக களமிறங்கும் பிரதமர் மோடி - எதிர்கட்சிகளை அலறவிடும் பா.ஜ.க'வின் மாஸ்டர் பிளான்!
தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய தகவல் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முக்கிய தகவல் கூறியுள்ளார்.
வரும் 2024 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, தமிழக பாஜக முழு அளவில் தற்போது அதன் வேலைகளை துவங்கி விட்டது. இப்பொழுது டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார், அனைத்து மாநில தலைவர்கள் மட்டுமின்றி முக்கிய தலைவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்திய அளவில் முழு வீச்சில் பாஜக 2024 தேர்தலுக்கு தயாராவது, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிப்பது, கள அளவிலான வாக்குகளை கவருவது போன்ற பல பல திட்டங்கள் விரைந்து தீட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து தனியா சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 'தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது தமிழக மக்களின் விருப்பம். காசி இராமேஸ்வரம் என இரண்டு நகருக்கும் ஆன்மீக தொடர்பு உள்ளது, கலாச்சார தொடர்பும் உள்ளது.
இப்படி இருக்கையில் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி போட்டியிடுவது குறித்து அனைவரும் விருப்பமாக கூறப்பட்டு இருக்கிறது, இருந்தாலும் பிரதமர் தங்கள் மாநிலத்தில் போட்டியிட வேண்டுமென அந்தந்த மாநில தலைவர்கள் தங்களது விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நான் குறிப்பாக தென் மாவட்டங்களை சுற்றுபயணம் முடித்துக்கொண்டு வரும்பொழுது மக்கள் என்னிடம் பிரதமர் தமிழகத்தில் போட்டியிடுவது குறித்து ஆர்வமாக கேட்கின்றனர்.