"பீகார் தேர்தல்களின் போது சிம்லாவில் ராகுல், பிரியங்கா பிக்னிக்"- கூட்டணிக் கட்சி ஆதங்கம்.!
"பீகார் தேர்தல்களின் போது சிம்லாவில் ராகுல், பிரியங்கா பிக்னிக்"- கூட்டணிக் கட்சி ஆதங்கம்.!
சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா-ஐக்கிய ஜனதா தள கூட்டணி நான்காவது முறையாக ஆட்சி அமைத்தது. இதற்கு முக்கியமான காரணமாக, எதிர்க்கட்சி கூட்டணியான மகாகத்பந்தன் (MGB) உடன் இருந்த காங்கிரஸ் கட்சி அதன் கூட்டணி கட்சிகளை போல் வெற்றி பெறத் தவறியதே காரணம் என்று கருதப்படுகிறது.
\70 இடங்களை கேட்டு வாங்கிய காங்கிரஸ், அதில் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கூட்டணியின் வெற்றி இடங்களை கீழே இழுத்துச் சென்றது. அதன் தோல்விக்குக் காரணங்களை ஆராய நடந்த பாட்னா கூட்டத்தில், யார் சட்டமன்ற தலைவராவது என்ற போட்டியில் 2 எம்எல்ஏக்கள் அடித்துக்கொண்டனர்.
இதையெல்லாம் பார்த்து அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள் இன் ஒரு தலைவர் சிவானந்த திவாரி, மகாகத்பந்தன் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் காங்கிரஸ் தலைமையான காந்தி குடும்பத்தையும் சாடியிருக்கிறார்.
#WATCH: RJD leader Shivanand Tiwari speaks on #BiharResults, says "...elections were in full swing & Rahul Gandhi was on picnic at Priyanka ji's place in Shimla. Is party run like that? Allegations can be levelled that manner in which Congress is being run, it's benefitting BJP." pic.twitter.com/ZZXmndMJFh
— ANI (@ANI) November 15, 2020
பீகார் தேர்தல்கள் நடந்து கொண்டிருந்தபொழுது ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியின் சிம்லாவில் விடுமுறையில் இருந்ததாகவும் இதுதான் கட்சி நடக்கும் முறையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அளித்துள்ள கருத்துக்களையும் அறிவுரைகளையும் மீறி காங்கிரஸ் கட்சி தங்கள் அணுகுமுறையில் மிகவும் பொறுப்பற்று நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார்.
‘Prestige is in winning seats, not in bargaining for them. Don’t be a dictator, learn the quality of accommodation from the PM and the BJP.’
— BJP (@BJP4India) November 15, 2020
- Senior RJD leader Shivanand Tiwari lashes out at Rahul Gandhi for Bihar debacle. pic.twitter.com/G9HuMZl3fe