சேகர் பாபு இந்துக்களுக்கு சினேக் பாபுவாக மாறிவிட்டார் - ஹெச்.ராஜா விமர்சனம்!

Update: 2022-05-31 07:34 GMT

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு சினேக் பாபுவாக மாறிவிட்டார் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செய்தியாளர்களை பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச்.ராஜா சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 9 மாதங்களாக கோயிலை சரி செய்யாமல் இருந்தது அறநிலையத்துறை அதிகாரிகளின் தவறு. அதனை செய்யாமல் விட்டதால்தான் பொதுமக்களே கையில் எடுத்தனர். தவறு என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும்.

மேலும், கார்த்திகோபிநாத் வசூல் செய்த பணம் எந்த பயன்பாட்டுக்காக வசூல் செய்தாரோ, அதற்கான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். கோயிலை புனரமைக்க அனுமதி கேட்டும் இதுவரையில் அனுமதி கொடுக்கப்படவில்லை. மாரிதாஸ், கிஷோர் கே சாமி, கல்யாணராமன் மற்றும் கார்த்தி கோபிநாத் கைது தொடர் கதையாக மாறியுள்ளது. எனவே அவரது கைதுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக போலீஸ் கடந்த 2 மாதத்தில் 5 லாக்கப் டெத் நடத்திய கொலைக்காரர்கள் தற்போது கார்த்திக் கோபிநாத்தை எங்கு வைத்திருக்கின்றனர் என தெரியவில்லை. தற்போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, இந்துக்களுக்கு சினேக் பாபுவாக மாறிவிட்டார். விரைவில் மக்களின் போராட்டங்கள் மூலம் இந்து அறநிலையத்துறையில் உள்ள கோயில்கள் மீட்பதை தவி எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Nakkheeran

Tags:    

Similar News