'ஐயா என் நிலத்த உதயநிதி அழைச்சுட்டு வந்து செங்கல் வச்சு பூஜை போட்டு ஆக்கிரமிச்சுட்டாங்க!' - திமுகவிடம் நிலத்தை பறிகொடுத்த அப்பாவி கதறல்
'ஐயா என் நிலத்தை அபகரிச்சது மட்டும் இல்லாம உதயநிதியை வைத்து பூஜை போட்டாங்க ஐயா' என திமுக மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
'ஐயா என் நிலத்தை அபகரிச்சது மட்டும் இல்லாம உதயநிதியை வைத்து பூஜை போட்டாங்க ஐயா' என திமுக மீது மேலும் ஒரு நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
திமுக என்றாலே நில அபகரிப்பு புகார் அப்படின்னு ஆகிவிட்டது, 'நில அபகரிப்பு சட்டம்' என்ற ஒரு சட்டமே உருவாக காரணமாக இருந்த வரலாற்று சிறப்புமிக்க கட்சி திமுக. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு ஆட்சி செய்த திமுக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள், கட்டிடங்கள், விவசாய நிலங்கள் போன்றவற்றை உரிமையாளர்களிடம் மிரட்டி எழுதி வாங்கிய அக்கிரமத்தை பொதுமக்கள் 2011 இல் புதிதாக ஜெயலலிதா அம்மையார் முதலமைச்சர் ஆனவுடன் புகார்களாக குவித்தார்கள்.
மக்களின் கஷ்டத்தை புரிந்து கொண்ட முன்னாள் முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் நில அபகரிப்புச் சட்டம் என்ற ஒன்றை உருவாக்கினார்கள். அதன்படி திமுகவினரால் பொதுமக்களிடையே மிரட்டி வாங்கப்பட்ட இடம் மற்றும் கட்டிடங்கள் பொதுமக்கள் யாரேனும் புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் புகார் மேல் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனால் பல திமுகவினர் பொதுமக்கள் அப்பாவி பொதுமக்களின் நிலங்களை அடித்துப் பிடிங்குயதும், மிரட்டி பிடுங்கியதும், உயிர் பயத்தை காட்டி பிடுங்கியதும், பணத்தை காட்டி எழுதி வாங்கியதும் தெரிய வந்தது இதனால் தமிழகமே அதிர்ச்சிக்கு உள்ளானது. இப்படி வரலாறு கொண்ட திமுக மீது மீண்டும் தற்பொழுது ஒரு நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது, அப்பொழுது எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் முதல் செங்கல்ல எடுத்து வைத்து பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து கட்சி அலுவலக கட்டுமான பணிகள் வேக வேக நடந்தன.
இந்த சூழல்ல திமுக அலுவலகம் கட்ட எனக்கு சொந்தமான ஆயிரம் சதுர அடி நிலத்தை திமுக மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம் அக்கிரமிச்சுட்டார்னு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் அப்டின்னு ஒருத்தர் போலீசில் புகார் குடுத்துருக்கார்.