இதுவரைக்கும் ட்ரைலர் தான், இனிதான் மெயின் பிக்சரே - அண்ணாமலை டெல்லி விஜயத்தின் ரகசியம்
பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள விவகாரம் பெரும் எதிர்பார்ப்பையும், தகிக்கும் சூழலையும் ஏற்படுத்தி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள விவகாரம் பெரும் எதிர்பார்ப்பையும், தகிக்கும் சூழலையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியல் சூழலில் தற்பொழுது பரபரப்பு நிலவி வருகிறது, குறிப்பாக தமிழக பா.ஜ.க'வில் அண்ணாமலை எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும், களத்தில் இறங்கி அவர் செய்யும் அரசியலிலும் எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாமல் கட்சிக்குள்ளே சில பூகம்பங்கள் வெடித்துள்ளன.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் களத்தில் அண்ணாமலை செய்யும் அரசியலை பொறாமையோடும், வாழ்நாள் பயத்தோடும் பார்க்கின்றன. ஏனெனில் மக்கள் பிரச்சினைகளை முதலில் பேசுகிறார்! களத்தில் அதிகம் பயணிக்கிறார்! அதிக மக்களை சந்திக்கிறார்! 'அறியப்படாத அதிசய மனிதர்கள்' என்ற பெயரில் நிறைய சமுதாயத் தொண்டு செய்து மக்களுக்காக வாழ்பவர்களை மக்கள் மத்தியில் பாராட்டி பிரபலப்படுத்துகிறார்.
இதெல்லாம் போதாது என சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலை புகழ் மற்ற தமிழக அரசியல்வாதிகளை விட ஒரு படி உயர்ந்தே உள்ளது. இன்றைய ஒரு படித்த இளைஞனை போய் இன்று உங்களை கவரும் அரசியல்வாதி யார்? யாருக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்கள்? என கேட்டால் யோசிக்காமல் பளிச்சன அண்ணாமலை என கூறுவார். அந்த அளவிற்கு அண்ணாமலையின் தாக்கம் குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் வியாபித்துள்ளது.
இந்த நிலையில் இதுவரை தமிழக பா.ஜ.க இருந்த பரிமாணத்தில் இருந்து முற்றிலும் அடுத்த கட்ட பரிமாணத்திற்கு நகர்ந்துள்ளது. அதற்க்கு அண்ணாமலை அவர்களே தக்க பதிலளித்துள்ளார் சீன மூங்கில் வளர்ச்சியை உதாரணமாக வைத்து, அண்ணாமலை கூறியதாவது, சீனா ஒருவகை மூங்கிலை முதலில் 90 நாட்களுக்கு தண்ணீர் ஊற்றினால் அது அப்படியேதான் இருக்கும் பார்ப்பவர்களுக்கு வளர்வது போல் தெரியாது ஆனால் 90 நாட்கள் கழித்து அதன் வளர்ச்சி தினமும் 4 செ.மீ இருக்கும். அப்படித்தான் தமிழக பா.ஜ.க! முதலில் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் போன்ற தலைவர்கள் இதற்க்கு நல்ல ஊட்டம் வரும் வகையில் தண்ணீர் ஊற்றிவிட்டனர், அதன் பலன் இப்பொழுது வளர்ச்சியில் தெரிகிறது என கூறியுள்ளார்.
குறிப்பாக தமிழக பா.ஜ.க தேர்தலுக்கு மட்டும் வேலை செய்யும் கட்சிகளுக்கு, மத்தியில் வருஷம் 365 நாளும் வேலை செய்யும் கட்சியாக இன்று மாறியுள்ளது என்றால் அதற்கு அண்ணாமலை மிக முக்கிய காரணம்.
இதன் காரணமாக களத்தில் மற்ற கட்சிகளின் மத்தியிலும், கட்சிக்குள் அண்ணாமலை எடுக்கும் நடவடிக்கைகளால் சிலர் பொறாமையில் வெம்பி வெடிக்கின்றனர். குறிப்பாக கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியே சென்ற சிலர் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவிப்பது, அண்ணாமலை தமிழக பா.ஜ.க'விற்கு துரோகம் இழைக்கிறார் என்பது போன்ற கருத்துக்களை கூறுவதும் பார்க்கையில் அண்ணாமலையின் வளர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது.