"எங்களுக்கு இடம் முக்கியமில்லை, லட்சியம்தான் முக்கியம்" - கூட்டணி பற்றி வைகோ!

"எங்களுக்கு இடம் முக்கியமில்லை, லட்சியம்தான் முக்கியம்" - கூட்டணி பற்றி வைகோ!

Update: 2021-01-26 10:02 GMT

எங்களுக்கு இடங்களின் எண்ணிக்கையை விட லட்சியமே முக்கியம் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில், ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது,  "வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், தி.மு.க கூட்டணியில் தான் ம.தி.மு.க இடம்பெறும். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை இடம் கிடைக்கும் என்பதை விட, எந்த லட்சியத்திற்காக போராடுகிறோம் என்பதை தொண்டர்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

ஏற்கனவே தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை தராமல் 200  தொகுதிகளுக்கு மேல் தனித்து நிற்பதாகவும், அதனினும் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் எனவும் நிர்பந்திக்க முடிவெடுத்துள்ளதகவும் செய்திகள் வரும் நிலையில் கூட்டணிக்காக நாங்கள் எந்த நிலையும் செல்ல தயார் என்பது போல் அறிக்கை விடுத்திருப்பது ம.தி.மு.க உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிகிறது.

Similar News