சால்வை போர்த்த முயன்ற உடன்பிறப்பை கீழே தள்ளிய ஸ்டாலின்!

சால்வை போர்த்த முயன்ற உடன்பிறப்பை கீழே தள்ளிய ஸ்டாலின்!

Update: 2021-01-21 07:59 GMT

சால்வை போர்த்த சென்ற உடன்பிறப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கீழே தள்ளிய சம்பவம் தி.மு.க தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேனியில் கிராமசபை கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் அடுத்ததாக மதுரை செல்வதற்காக உசிலம்பட்டி வழியாக சொன்றார். அப்பொழுது உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தி.மு.க சார்பில் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வேனில் ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில்  சால்வை பெற்றுக்கொண்டு, கையசைத்துக்கொண்டே  சென்றார். 

அப்பொழுது மக்களிடையே வாகனம் சற்று நின்றது. அப்பொழுது தி.மு.க தொண்டர் ஒருவர் ஆர்வமிகுதியில் வேனில் ஏறி தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சால்வை போர்த்த சென்றார்.

அதனை பார்த்து கடுப்பாகிய ஸ்டாலின் சால்வை அணிவிக்க வந்தவரை திட்டிக்கொண்டே கீழே தள்ளிவிட்டார். சால்வை அணிவிக்கவந்த உடன்பிறப்பை திட்டி கீழே ஸ்டாலின் தள்ளிவிட்டதால் அங்கிருந்த உடன்பிறப்புகள் அனைவரும் இந்த செயலினால் அதிர்ச்சியடைந்தனர்.

இன்னும் சிலர் "சால்வை தானே போர்த்த வந்தார், அதுக்கு போயா இப்படி தள்ளிவிடுவார், ஏற்கனவே மெட்ரோ ரயில்'ல்ல இப்படித்தானே ஒருத்தரை அடிச்சாரு. ஏன் இப்படி நடந்துக்கிறார்?" என அலுத்துக்கொண்ட நிகவும் நடந்தது.

Image soure - WIN NEWS

Similar News