ஸ்டாலினின் அப்பா விஞ்ஞான பூர்வமான ஊழலை செய்துள்ளார்.. நாங்க சொல்லல.. கமிஷனே கூறி உள்ளது.. கே.பி.முனுசாமி.!

ஸ்டாலினின் அப்பா விஞ்ஞான பூர்வமான ஊழலை செய்துள்ளார்.. நாங்க சொல்லல.. கமிஷனே கூறி உள்ளது.. கே.பி.முனுசாமி.!

Update: 2020-12-22 19:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் மற்றும் வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற அ.தி.மு.க.வி.ன் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யு.மான கேபி.முனுசாமி பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஸ்டாலின் எப்படியாவது இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென கடுமையாக முயற்சி செய்கிறார். அவருக்கு எது எடுத்தாலும் தோல்வி கிடைத்துக்கொண்டே வருகிறது. கடைசி ஆயுதமாக இதை கையில் எடுத்துள்ளார். அவர் தந்தை விஞ்ஞான பூர்வமாக உழலை செய்தார் என்று ஒரு கமிஷனே கூறியுள்ளது.

அந்த குடும்பத்தில் இருந்த வந்தவரும் ஊழலுக்கு சொந்தக்காரர் என அனைவருக்கும் தெரியும். அரசின் மீது குற்றம் சாட்ட முடியாமல் இது போன்று செய்து வருகிறார். அ.தி.மு.க., எந்த நேரத்திலும் சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர்க்கொள்வதற்கு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News