2020ம் ஆண்டு ஸ்டாலினின் டாப் 10 காமெடிகள் / உளறல்கள்
2020ம் ஆண்டு ஸ்டாலினின் டாப் 10 காமெடிகள் / உளறல்கள்
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் கடந்த 2020'ம் வருட சறுக்கல்கள் / காமெடிகளை பட்டியலிட்டால் எண்ணிலடங்காதவை அதில் இங்கு பத்து முக்கியமான விஷயங்களை / உளறல்களை இங்கே காணலாம். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய தருணங்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் காமெடி தருணங்களாக்கிய நிகழ்வுகள்.
* ஏழுவர் விடுதலையில் கருத்து சொல்ல ஆசைப்பட்டு "பேரறிவாளனை மனிதாபிமானமற்ற முறையில் கவர்னர் விடுதலை செய்ய வேண்டும்" என கூறி உடன் இருந்த உடன்பிறப்புகளையே சற்று உதற வைத்த பெருமை தி.மு.க தலைவர் ஸ்டாலினை சாரும்.
* கோடை காலத்தில் வறட்சியான இடங்களுக்கு லாரியில் தண்ணீர் கொண்டு வந்து விநியோகம் செய்வதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், "மக்களுக்கு தண்ணீர் தரக்கூடிய விநியோகத்தை தொடங்கி வைக்கிறார்! ஏன் தண்ணீரில் கொண்டு வந்து லாரி குடுக்கனும்" என வார்த்தைகளின் மீது தண்ணீர் லாரியை ஏற்றியது வரலாறு.
* சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் வேறு இடம் மாற்றுவது தொடர்பாக கருத்து சொல்ல விழைந்து கடைசியில், "சேலம் செவ்வாய்பேட்டை லாரி மேர்க்ட்டு வேற இடம் மாற்ற சொல்ல... நிறைவேற்றி... கேரிக்கை... கோரிக்கை வச்சாங்களே.." என ஒருவழியாக முடித்ததில் அதை கேட்ட உடன்பிறப்புகளுக்கு உயிர் போய் உயிர் வந்தது.
* பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவிற்கு சென்று அவரின் தியாகத்தை கூறுகிறேன் என்ற பெயரில் "தேவர் இனத்தை குற்றப்பத்திரிகை'யில் இருந்து நீக்கிட போராடியவர்" என கூறி முடித்து தேவர் சமுதாயத்தை குற்றப்பத்திரிக்கையில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
* தமிழக அரசையும், மத்திய அரசையும் விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் ஸ்டாலின் பேசியது உளறலில் கொடுமை. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து பேசும் வேளையில் "2011, 2012'ம் ஆண்டு தமிழகத்தில் 'தானே' புயல் தாக்கியதில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு 5249 கோடி ரூபாய் கேட்டதற்கு மத்திய பா.ஜ.க அரசு குடுத்தது 500 கோடி மட்டுமே என ஆவேசமாக பேசினார். ஆனால் உண்மையில் 2011, 2012'ம் ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது வரலாறு. இதனால் தலையை பிய்த்து கொண்டனர் உடன்பிறப்புகள்.