ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் அப்பாவி பெண்ணை தாக்கிய திமுகவினர்.. குண்டர்களை கைது செய்ய அதிமுகவினர் சாலை மறியல்.!

ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் அப்பாவி பெண்ணை தாக்கிய திமுகவினர்.. குண்டர்களை கைது செய்ய அதிமுகவினர் சாலை மறியல்.!

Update: 2021-01-02 13:34 GMT

கோவையில் திமுகவினரால் நடத்தப்பட்ட கிராம சபைக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அப்பாவி பெண்ணை தாக்கியவர்ளை கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவின் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே இன்று போலியான கிராம சபைக்கூட்டம் திமுக சார்பில் நடத்தப்படுகிறது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது ஒரு பெண் நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.

கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஸ்டாலின், நீங்க அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள்தானே என கூறினார். இதனையடுத்து திமுக கும்பல் அப்பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அப்பெண்ணை விடாமல் சாலை முழுவதும் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், பெண்ணை தாக்கிய திமுக ரவுடிகளை உடனே கைது செய்ய வேண்டும் என தொண்டாமுத்தூரில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தற்போது கோவை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Similar News