சேற்றில் உட்கார வைத்து கொடுமை - தி.மு.க கிராம சபை கூட்டத்தில் படம் காட்ட கொடுமை படுத்தப்படும் தமிழர்கள்!
சேற்றில் உட்கார வைத்து கொடுமை - தி.மு.க கிராம சபை கூட்டத்தில் படம் காட்ட கொடுமை படுத்தப்படும் தமிழர்கள்!
நேற்று (04.01.2020) கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில், தெற்கு ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சிப் பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட இடமே முதலில் தொண்டர்களை அவஸ்தைக்குள்ளாக்கி முகம் சுளிக்க வைத்தது. தரையில் கால் வைத்தால் அரை அடிக்கு உள்ளே செல்லுமளவுக்கு சேறும்,சகதியும் இருந்த இடத்தில் சிவப்பு நிற தரை விரிப்பு போடப்பட்டிருந்தது. மாலை 4 மணிக்கு ஸ்டாலின் வருவதாகக் கூறப்பட்டிருந்ததால் 3 மணிக்கே அந்த இடத்தில் பெண்கள் தரையில் அமரவைக்கப்பட்டார்கள்.
சிறிது நேரத்தில் தரைவிரிப்பைத் தாண்டி சேறும் நீரும் மேலே வந்துவிட்டதால் அங்கு அமர்ந்திருந்த பெண்களும், பெரியவர்களும் நெளியத் தொடங்கினர். தரைவிரிப்பு முழுவதும் ஈரமாகி விட்டதால், இடம் மாறி மாறி உட்கார்ந்தும் பயனில்லாமல் போனது."தலைவர் இதோ வருகிறார்... அதோ வருகிறார்... அதோ வந்து விட்டார்" என்று நிர்வாகிகள் தொடர்ந்து பில்டப் கொடுத்துக்கொண்டே இருந்ததால் சேறு, சகதி கொடுமையை தாண்டி உடன்பிறப்புகளின் கொடுமையை சகித்துக்கொள்ள வேண்டிய நிலை வேறு அங்கு வந்த கூட்டத்திற்கு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் அந்தச் சேற்றிலேயே பாவமாக அமர்ந்திருந்தனர் மக்கள்.