ஒரிஜினல் விவசாயி மருந்தடிச்சிட்டு இருக்காரு.. நாடக கம்பெனி போட்டோ சூட் நடத்திட்டு இருக்கு.!

ஒரிஜினல் விவசாயி மருந்தடிச்சிட்டு இருக்காரு.. நாடக கம்பெனி போட்டோ சூட் நடத்திட்டு இருக்கு.!

Update: 2020-12-01 09:23 GMT

திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்று 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரம் முழுவதும் மக்களிடம் நாடகத்தை அரங்கேற்றுவதே உதயநிதியின் குறிக்கோளாக உள்ளது.


திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் தனது பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார். அப்படி செல்லும்போது 100 துணை நடிகர்களையும் அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


விவசாயிகள் நடமாட்டம் இல்லாத வயல்வெளிகளில் திமுகவினர் உதயநிதியை வைத்து தினமும் போட்டோ சூட் நடத்தி வருகிறது. விவசாயிகளை சந்திப்பது போன்ற தோற்றத்தை திமுகவினர் அரங்கேற்றுவதை அனைத்து ஆதாரங்களுடன் சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர்.


அதே போன்று நேற்று உதயநிதி விவசாயிகளை சந்திக்கின்ற காட்சி படமாக்கப்பட்டது. அந்த ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ஒரு விவசாயி பின்னால் மருந்தடிச்சிட்டு இருக்கிறார். ஆனால் அதனை தெரியாமல் உதயநிதி மற்றும் அவரது துணை நடிகர் கூட்டம் போட்டோ செல்பி எடுக்கின்றனர். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இது போன்ற அரிய காடசிகள் இடம் பெறும் என்று மக்கள் புலம்பிவருவதை காணமுடிகிறது.

Similar News