ஓட்டை பேருந்து வாங்கியவர் திமுகவில் உள்ளார்.. அவரிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளட்டும் ஸ்டாலின்.. அமைச்சர் பதில்.!

ஓட்டை பேருந்து வாங்கியவர் திமுகவில் உள்ளார்.. அவரிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளட்டும் ஸ்டாலின்.. அமைச்சர் பதில்.!

Update: 2020-12-08 19:50 GMT

கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்துவதில் ஊழல் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு சொல்லி வருகின்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனைதொடர்ந்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆயிரக்கணக்கில் ஊழல் செய்துள்ளதாக கூறி வருகிறார்.

தினமும் அரசு மீதும், முதலமைச்சர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார் ஸ்டாலின். போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு விருதுகளை இந்திய அளவில் பெற்றுள்ளது. எப்.சி., எடுக்க செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் தான் வாங்க வேண்டும் என்றும், அமைச்சர் சொல்லும் நிறுவனங்களில் தான் வாங்க வேண்டும் என எந்த உத்தரவையும் பிறக்கப்படவில்லை. 

மத்திய அரசின் உத்தரவின் பெயரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் ஒளிரும் பட்டைகள் பொறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒரிஜினல் பட்டை விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும், அதற்கும் தடையாணை பெறப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாடு கருவிகள் பொறுத்துவது தொடர்பாக லாரி சங்கத்தினர் குற்றம்சாட்டு சொல்லி வருகின்றனர். அது பொய்யான குற்றச்சாட்டு என்றும், ஆதாரமற்றது என்றார்.

வேக கட்டுப்பாட்டு கருவி 2017 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. 1.12.2019 முதல் முறையாக செய்ய வேண்டும் என்று ஜி.பி.எஸ் பொறுத்த, 15 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 நிறுவனங்கள் வேக கட்டுப்பட்டு கருவி பொறுத்த விண்ணப்பித்து இருந்தார்கள் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2 நிறுவனங்களுக்கு ஒளிரும் பட்டைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டு கருவிகள் தற்போது புதிதாக வரும் வாகனங்களுடன் வருகிறது. அவற்றை இணைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை அவற்றை மென்பொருளுடன் இணைக்க வேண்டும் என்றார்.

தேசிய நெடுஞ்சாலையில் 24 கோடிக்கு மதிப்பில் டெண்டர் 2019 விடப்பட்டது. ஆனால் கொரோனா கால கட்டம் என்பதால் தள்ளி வைக்கப்பட்டது.
தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இருந்து 23 கோடி டெண்டரை கோரப்பட்டுள்ளதை 900 கோடி டெண்டராக உயர்த்தப்பட்டதாக ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் சொல்லி வருகிறார்? அதனை நிரூபிப்பாரா? 

மேலும், பேருந்தில் மேற்கூரையில் மழைநீர் ஒழுகுவதாக குற்றம் சாட்டுகிறார். 2012ம் ஆண்டு வாங்கப்பட்ட பேருந்துகள் அவை. தற்போது அந்த நடைமுறை இல்லை. அப்போது அமைச்சராக இருந்தவர் தற்போது அவர் கட்சியில் உள்ளார். அவரிடம் விளக்கம் கேட்டுக் கொள்ளட்டும் என்று செந்தில் பாலாஜியை கடுமையாக குற்றம்சாட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News