'பா.ஜ.க 30 ஆண்டு ஆட்சி செய்யும் என சொல்லும் பிரசாந்த் கிஷோர் என்ன மந்திரவாதியா' கடுப்பில் திருநாவுக்கரசர்!

Update: 2022-05-13 11:43 GMT

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் திருச்சியில் நடைபெறும் மேம்பால பணியை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 8 ஆண்டுகளாக மேம்பாலப் பணி நிறைவடையாமலேயே இருந்தது. எம்.பி. தேர்தலின்போது அரிஸ்டோ மேம்பால பணியை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அதன்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து பேசினேன். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சில அமைச்சர்களும் முயற்சி மேற்கொண்டனர். இதற்கு முன்னர் திருச்சி எம்.பி.யாக இருந்தவர்களும் முயற்சி மேற்கொண்டனர்.

இந்நிலையில், தற்போது மேம்பால பணிகள் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் பணி முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மேலும், பா.ஜ.க.வின் ஆதிக்கம் 30 வருடங்களுக்கும் இருக்கும் என சொல்லும் பிரசாந்த் கிஷோர் மந்திரவாதி கிடையாது. காங்கிரஸ் கட்சியில் இணையாமல் இருப்பது அவருக்கும் மற்றும் கட்சிக்கும் நல்லது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News